Featured Post 8

fxvcx

About

    Latest Posts

    Monday, April 20, 2015

    ரேஷன் கார்டுகளுக்குப் பதில் ‘ஸ்மார்ட் கார்டு’... தமிழக அரசு முடிவு

    போலிகளை ஒழிக்க, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. 

    இதனைத் தொடர்ந்து ரேஷன் அட்டைகளிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை அரசு துவங்க உள்ளது. போலி ரேஷன் அட்டைகளை ஒழிப்பதற்காக இந்தப் பணி மேற்கொள்ளப் படுகிறது. 

    இது தொடர்பாக உணவுப்பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக, ‘ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டம் இந்த ஆண்டு இறுதியில் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

    ஆதார் அட்டைக்கான ‘பயோமெட்ரிக்' பதிவை பயன்படுத்தி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் அட்டைகளில் ஆதார் எண் இணைக்கும் அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகும். அந்தந்த ரேஷன் கடைகளில் இதற்கான முகாம் நடத்தப்பட உள்ளது.

    ரேஷன் அட்டையில் ஒருவரது பெயர் 2 பகுதியில் இருந்தாலும், இறந்தவர்களின் பெயர் இருந்தாலும் நீக்கம் செய்ய வேண்டும். திருமணமான பெண்களுக்கு பிறந்த வீட்டில் பெயர் நீக்கம் செய்து, புகுந்த வீட்டு ரேஷன் அட்டையில் சேர்க்க வேண்டும். 2 பகுதிகளில் உள்ள ரேஷன் அட்டைகளில் ஆதார் எண் ஒரே எண்ணாக இருந்தால், கணினியில் பதிவு செய்யும்போது, தானாகவே 2 பகுதிகளிலும் ரேஷன் அட்டைகள் ரத்தாகி விடும். மீண்டும் புதிதாக விண்ணப்பித்து ஏதாவது ஓரிடத்தில் அட்டை பெற வேண்டியிருக்கும்.

    எனவே, மே மாத இறுதிக்குள் 2 அட்டைகளில் பெயரோ, இறந்தவர் பெயரோ ரேஷன் அட்டைகளில் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட உள்ளது' என்றார்.

    மேலும் தங்கள் ஆதார் அட்டையும், வாக்காளர் அட்டையும் இணைக்க முகாமிற்கு செல்லவேண்டிய அவசியமில்லை...

    http://electoralsearch.in/?feedaadhaar  மூலமாக உங்கள் தகவல்களை பதிவு செய்யலாம் அல்லது  To feed your Aadhaar Number by SMS type, ECILINK <EPIC_Number> <Aadhaar_Number>  and send it to 166 / 51969  Standard SMS charges apply. எஸ்.எம்.எஸ் மூலமும் பதிவு செய்தால் போதுமானது.


    more »

    Sunday, April 19, 2015

    நாச்சிகுளம்-இந்திரா காலணியில் தீ விபத்து

    நாச்சிகுளம், இந்திரா காலணியில் 19-4-2015 இன்று மாலை 5 மணியளவில் அண்ணாத்துறை (கொத்தனார்) அவர்கள் வீடு மின் கசிவால் தீகரையானது.

    உடனடியாக மின் துண்டிக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள் அணைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தால், அவர் வீட்டில் இருந்த பல பொருட்கள், ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. 

    இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மேலும் தீபவாமல் தடுக்க தண்ணீர் ஊற்றப்பட்டது.











    more »

    Friday, January 16, 2015

    விபத்து

    ஜனவரி 15: அதிராம்பட்டினத்திலிருந்து  நாச்சிகுளம் வழியாக  சென்னைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. 23 பயணிகள் இருந்தனர்.இன்று அதிகாலை 4 மணி அளவில் பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூரை அடுத்த தண்டலம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலை ஓர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. பஸ்சின் அடியில் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு தண்டலம் கிராம மக்களும், அவ்வழியே வாகனங்களில் சென்றவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து இருக்கைக்கு அடியில் சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பயணி அதிரை சேர்ந்த அப்துல் கறீம் (54) சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும், அதிரை சேர்ந்த சலீம், யாஸ்மின், முகமது அலி, ஹஜியம்மா உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் துரைப்பாக்கத்தை சேர்ந்த வினோதா உள்பட 2 பேரின் கால் துண்டாகி உள்ளது. அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.காயம் அடைந்த அனைவரையும் சென்னை, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.பலியான அப்துல் கறீம் பாலவாக்கத்தில் சொந்தமாக தண்ணீர் லாரி வைத்து தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    விபத்து குறித்து பயணி இப்ராஹிம் கூறும் போது,
    ‘‘அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டு இருந்தோம். திடீரென ஆம்னி பஸ் பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.சீட்டுக்குள் சிக்கிய அனைவரும் பயத்தில் கூச்சலிட்டோம். கிராம மக்கள் விரைந்து வந்து மீட்டதால் பலர் உயிருடன் தப்பினோம்’’ என்றார்.
     
     
     
     


     
    more »

    Thursday, January 15, 2015

    (15-1-2015) மரண அறிவிப்பு

    நாச்சிகுளம் நடுத்தெரு குனா.சன. மைதீன் பிச்சை அவர்களின் மனையும், அபுல்ஹசன், ஜாகிர் உசைன், ரஜாக் ஆகியோரின் தாயார் நூர்ஜகான் அவர்கள் 15-1-2015 அன்று இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள். 

    ஜனாஷா தொழுகை அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.


    more »

    Saturday, January 10, 2015

    இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு

    இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு. ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றவும்................



    more »

    Thursday, January 1, 2015

    (2-1-2015) மரண அறிவிப்பு

    நாச்சிகுளம் புதுமனைத் தெருவை சார்ந்த K.S.காதர் பாவா அவர்கள் 2-1-2015 இன்று காலை இறைவனிடம் சேர்ந்தார்கள். 

    ஜனாஷா தொழுகை இன்ஷா அல்லாஹ் மாலை 4மணிக்கு நடைபெறும். 

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.


    more »